states

img

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் காவல் நீட்டிப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல் வரும், தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி ஊழல் வழக்கு தொடர் பாக கைது செய்யப்பட்டு, விஜய வாடாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமகேந்திர வர்மம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய சந்திரபாபு நாயுடுவின் மனுவை, விஜயவாடா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதார மில்லை என்றும் ஜாமீன் கோரியும் இரண்டு மனுக்களை சந்திரபாபு நாயுடு விஜயவாடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.